திருபுவனம் திகோசில்க்ஸ் பட்டுச்சேலையை வாங்கி உடுத்த எல்லோருமே விரும்புவார்கள். ஏன் என்றால், அதன் தரமும் பாரம்பரியமும் அத்தகையது! தரம் மிகுந்த பொருட்களின் விலை சற்று கூடுதலாக இருப்பது கண்கூடு. திகோசில்க்ஸ் பட்டுச்சேலையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒட்டுமொத்தமாக தொகை செலுத்தி ஒரு பொருளை வாங்குவதில் மாத சம்பளக்காரர்களுக்கு இருக்கும் சிரமத்தை நன்குணர்ந்தே “எல்லோர்க்கும் பட்டு” என்கிற மாதாந்திர சேமிப்புத் திட்டத்தை திகோசில்க்ஸ் முன்னெடுத்திருக்கிறது. வாங்கும் சக்தியை அதிகரிக்க உதவும் இந்த சேமிப்புத் திட்டத்தில் யார் ஒருவரும் பங்குபெற்று, மாதா மாதம் தவணைகளை செலுத்தி திகோசில்க்ஸ் பட்டுச்சேலைகளை சுலபமாக இனி வாங்கலாம். இந்த திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் உரிய விண்ணபத்தை பூர்த்தி செய்து முதல் தவணையினை நேரடியாக சங்க தலைமையகம் அல்லது குறிப்பிட்ட கிளைகளில் வழங்கியவுடன் அவர்களுக்கு ஓர் 9 இலக்க பதிவு எண் தரப்படும். பிற தவணைகளை RTGS பணம் செலுத்துவதற்கான பிற வங்கிச் சேவைகள்-G-Pay, Paytm போன்ற மொபைல் போன் சேவைகள் மூலமாகவோ அல்லது; சங்கத்திற்கு நேரடியாக வந்து பணமாகவோ அவர்களுக்குரிய பதிவு எண்ணில் தொகை செலுத்த வேண்டும். (அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மற்றும் மொபைல் போன் சேவைகள் மூலம் செய்வதே சிறப்பானதாகும்)
Welcome to Thico Silks
"Ellorukkum Pattu" Savings Scheme
"எல்லோர்க்கும் பட்டு"
திட்ட விபரம்